இராமச்சந்திர ஆதித்தனார் நினைவு கோப்பை...!!!

இராமச்சந்திர ஆதித்தனார் நினைவு கோப்பை...!!!

மாலைமுரசு அதிபர் 'இராமச்சந்திர ஆதித்தனார் ஆண்களுக்கான டென்னிஸ் போட்டி' யின் தகுதி சுற்றில் வெற்றி பெற்ற 16 வீரர்கள் பிரதான சுற்றுக்கு முன்னேறினர்.

சென்னை அடையாறில் உள்ள காந்தி நகர் கிளப் டென்னிஸ் மைதானத்தில், மாலை முரசு அதிபர் ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு கோப்பைக்கான டென்னிஸ் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.   இதில், பிரான்ஸ், ஜப்பான், உக்ரைன், ஸ்பெயின் உள்ளிட்ட 9 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 

மிகவும் விமரிசையாக தொடங்கிய ஆண்களுக்கான டென்னிஸ் போட்டி அடுத்த 8 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.  இந்நிலையில், முதல்நாளில் நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியில், 8 அணிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.  ஒவ்வொரு அணிக்கும் இரண்டு போட்டிகள் வீதம், 16 ஆட்டங்கள் நடைபெற்றன.  மொத்தம் 32 வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்.  இந்திய வீரர்களுக்கு இடையே மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற தகுதி சுற்று போட்டிகளில், 16 வீரர்கள் வெற்றி பெற்று பிரதான சுற்றுக்கு முன்னேறினர்.

இதன் இறுதி நாளில் வெற்றி பெறும் அணிக்கு, மாலை முரசு நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன் பங்கேற்று 'பா.இராமச்சந்திர ஆதித்தனார் நினைவு கோப்பையை' வழங்கி கௌரவிக்க உள்ளார்.

இதையும் படிக்க:   அண்ணா சாலை எல்ஐசியில் திடீர் தீ விபத்து...!!