வெற்றிவாகை சூடிய ராஜஸ்தான் ராயல்ஸ்...!!!

வெற்றிவாகை சூடிய ராஜஸ்தான் ராயல்ஸ்...!!!

16-வது ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் ஐதராபாத் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மும்பை அணியை பெங்களூரு அணியும் வென்று வெற்றிவாகை சூடியுள்ளது. 

16-வது சீசன் ஐபிஎல் கிாிக்கெட் தொடாின் நேற்று நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஐதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.   முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவா்களில் 203 ரன்கள் குவித்தது.   இதனையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.   இதன் மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது. 

மற்றொரு ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.  முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது.  இதனையடுத்து 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய பெங்களூரு அணி 16. 2 ஒவர்களில் தனது இலக்கை எட்டி பிடித்து வெற்றி வாகை சூடியது.

 ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பா் ஜெயன்ட்ஸ் அணியும் மோத உள்ளன.  

இதையும் படிக்க:  இராமச்சந்திர ஆதித்தனார் நினைவு கோப்பை...!!!