டோக்கியோ ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்று சாதனை...

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனின், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து வெண்கலப் பதக்கம் வென்று சாதனை  படைத்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்று சாதனை...

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் பி.வி.சிந்து சீன வீராங்கனையான ஹி பிங் ஜியாவோவை எதிர்கொண்டார். துவக்கம் முதலே போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வந்த சிந்து முதல் செட்டை 21க்கு 13 என்ற கணக்கில் எளிதாகக் கைப்பற்றினார்.

இதையடுத்து இரண்டாவது செட்டை 21க்கு 15 என்ற கணக்கில் வென்று, 21க்கு 13 மற்றும் 21க்கு 15 என்ற நேர் செட்டுகளில் ஹி பிங் ஜியாவோவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தார்.இதன் மூலம்  டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.மேலும் ஒலிம்பிக் தனிநபர் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை  பிவி சிந்து என்ற சாதனையையும் படைத்துள்ளார்.