பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!!

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 107 பதக்கங்களை வென்ற இந்திய விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 107 பதக்கங்களை வென்று இதுவரை இல்லாத அளவில் வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதனால் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் 107 பதக்கங்களை வென்ற இந்திய விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு என்ன ஒரு வரலாற்று சாதனை! என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில், இதுவரை இல்லாத அளவுக்கு 107 பதக்கங்களை நமது அபாரமான விளையாட்டு வீரர்கள் தங்கள் வீட்டிற்கு கொண்டு வந்ததில் ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சியில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். நமது வீரர்களின் அசைக்க முடியாத உறுதியும், இடைவிடாத மனமும், கடின உழைப்பும் தேசத்தை பெருமைப்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.