பயிற்சிக்காக தமிழ்நாடு வந்த மணிப்பூர் வீரர்கள்!

பயிற்சிக்காக தமிழ்நாடு வந்த மணிப்பூர் வீரர்கள்!

மணிப்பூரில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையால் தமிழகத்தில் பயிற்சி மேற்கொள்வதற்காக மணிப்பூரை சேர்ந்த வாள் வீச்சு வீரர் வீராங்கனைகள் சென்னை வந்தடைந்தனர்.

மணிப்பூரில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையால், அம்மாநில விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற சாதகமற்ற சூழ்நிலை உள்ளது.மேலும் ஆசிய போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகள் நெருங்கி வருகின்ற நிலையில் அவர்களால் முறையாக பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில்  மணிப்பூரைச் சேர்ந்த 10 வாள்வீச்சு வீரர்கள் - 5 வீராங்கனைகள் - 2 பயிற்சியாளர்கள் தமிழ்நாடு வர விருப்பம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மணிப்பூர் வீரர் - வீராங்கனையர் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். சென்னை வந்தடைந்த அவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்  சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் தங்கும் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் இவர்கள் பயிற்சி பெற உள்ளனர்.

இதையும் படிக்கவிடுதலை சிகப்பி மீதான வழக்கின் விசாரணைக்கு தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு!: