சிஎஸ்கே தோல்விக்கு அந்த சீனியர் வீரர் தான் காரணமா?.. ஜடேஜா பேச்சால் குழப்பமான ரசிகர்கள்!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7வது லீக் போட்டி, மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

சிஎஸ்கே தோல்விக்கு அந்த சீனியர் வீரர் தான் காரணமா?.. ஜடேஜா பேச்சால் குழப்பமான ரசிகர்கள்!!

இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர் கெய்க்வாட் ஒரு ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு துவக்க வீரர் ராபின் உத்தப்பா, அதிரடியாக ஆடி பந்துவீச்சாளர்களை திணறடித்தார். 27 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரை சதம் விளாசிய உத்தப்பா, ரவி பிஷ்னோய் பந்தில் எல்.பி.டபுள்யு. முறையில் ஆட்டமிழந்தார்.

அதிரடியில் மிரட்டிய மொயீன் அலி 22 பந்துகளில் 35  ரன்கள் சேர்த்தார். அதன் பின் வந்து அதிரடியாக விளையாடி ஷிவம் துபே 49 ரன்கள் குவித்தார். இறுதியில், 7 விக்கெட் இழப்பிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் 210 ரன்கள் குவித்தது.

இதன் பின்னர் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்கியது. துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கேஎல் ராகுல் 40 ரன்கள் விளாசிய நிலையில் பெவிலியன் திரும்பினார். மற்றொரு துவக்க வீரான டி காக், பொறுப்பான ஆட்டத்தால் 61 ரன்கள் குவித்தார்.

இதைடுத்து களமிறங்கிய லெவிஸின் அதிரடி ஆட்டத்தால், போட்டி விறுவிறுப்படைந்தது.  23 பந்துகளில் 55 ரன்கள் குவித்த அவர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு துணையாக களத்தில் இருந்த ஆயுஷ் படோனி 19 ரன்கள் எடுத்தார். இதனால், லக்னோ அணி 19 புள்ளி 3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்தது. இதையடுத்து  6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்த தோல்விக்கு பிறகு பேசிய சிஎஸ்கே அணியின் கேப்டன் ஜடேஜா, எங்களுக்கு துவக்கம் நன்றாக தான் இருந்தது. ராபின் உத்தப்பா மற்றும் ஷிவம் தூபே மிகச்சிறப்பாக விளையாடினார்கள். பேட்டிங்கில் சிறப்பாக விளையாடியது போல ஃபீல்டிங்கில் எங்களால் சிறப்பாக செயல் பட முடியவில்லை. ஆட்டத்தின் போது சிறுது நேரத்திலே அதிக பனிப்பொழிவு வரத்தொடங்கி விட்டது.

பனிபொழிவால் பந்து கையை விட்டு நழுவி கொண்டே இருந்தது. ஆட்டத்தில் கேட்ச்கள் தான் ரொம்ப முக்கியம்.. அது தான் வெற்றியை தேடி தரும். அந்த வகையில், 2 கேட்ச்கள் விடப்பட்டுள்ளன.  அதுவும் தோல்விக்கு வழிவகுத்தது. எனவே அதில் அதிக கவனம் செலுத்துவோம் என தெரிவித்தார்.

ஜடேஜா கூறிய கேட்ச் சிக்கலுக்கு காரணம் மொயின் அலி மற்றும் ஷிவம் தூபே தான். குயின்டன் டிக்காக் 30 ரன்களில் இருந்தபோது, பிராவோ பந்தில் கேட்ச் கொடுத்தார். ஆனால் சீனியர் வீரர் மொயின் அலி அதை தவறவிட்டார். இதனால், குயின்டன் டிகாக் 61 ரன்கள் அடித்தார். அதேபோல், கே.எல்.ராகுலின் கேட்சை துஷார் தேஷ்பாண்டே வீணடித்தார். அனைவரும் ஷிவம் தூபே வீசிய 19வது ஓவரே தோல்விக்கு காரணம் என கூறும் நிலையில், ஜடேஜா கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.