ஐபிஎல் கிாிக்கெட் போட்டி: நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா, ஹைதராபாத் அணிகள் வெற்றி..!

ஐபிஎல் கிாிக்கெட் போட்டி: நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா, ஹைதராபாத் அணிகள் வெற்றி..!

ஐபிஎல் கிாிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை கொல்கத்தா அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியை ஹைதராபாத் அணியும் வென்று வெற்றிவாகை சூடியுள்ளன.

16-வது சீசன் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது. 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரா்கள் எதிரணி வீரா்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தனா். குறிப்பாக ரிங்கு சிங் கடைசி ஓவாில் தொடர்ந்து 5 சிக்ஸர்களை பறக்க விட்டு அணியை வெற்றி பெற செய்தார்.

மற்றொரு ஆட்டத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கோதாவில் இறங்கின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி எதிரணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 143 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 144 ரன்கள் இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய ஹைதராபாத் அணி இறுதியில்17 புள்ளி 1 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணியை  லக்னோ சூப்பா் ஜெயன்ட்ஸ் அணி எதிா்கொள்கிறது. இதில் யாா்? வெற்றிக்கனியை பறிப்பாா்கள் என்று ரசிகா்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனா்.