பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்.. சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி - 19 வயதான ஹோல்கர் ருனே காலிறுதிக்கு முன்னேற்றம்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் இளம் வீரர் ஹோல்கர் ருனேவிடம் முன்னணி வீரர் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்..  சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி - 19 வயதான ஹோல்கர் ருனே காலிறுதிக்கு முன்னேற்றம்

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்று ஆட்டத்தில், உலக தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள கிரீசின் சிட்சிபாஸ், 19 வயதான டென்மார்க்கின் ஹோல்கர் ருனேவை எதிர்கொண்டார்.

கடந்த பிரெஞ்ச் ஓபனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சிட்சிபாஸ், இப்போட்டியில் இளம் வீரரான ருனேவை எளிதில் வீழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில், அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ருனே, 7-5, 3-6, 6-3, 6-4 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று சிட்சிபாசுக்கு அதிர்ச்சியளித்தார். இதன்மூலம், காலிறுதிக்கு முன்னேறி ஹோல்கர் ருனே அசத்தியுள்ளார்.