இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்...  இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்...

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற, தென்னாப்பிரிக்கா அணிக்கு இன்னும் 211 ரன்கள் தேவைப்படுகின்றன.

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்...  இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்...

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, செஞ்சுரியன் நகரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 327 ரன்களும், தென் ஆப்பிரிக்கா அணி 197 ரன்களும் சேர்த்தன. இதையடுத்து 130 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, நான்காம் நாளான நேற்று 174 ரன்களில் சுருண்டது. 

இதனையடுத்து 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில், சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. இதனால் 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் சேர்த்துள்ளது.  

இன்னும் 211 ரன்கள் தேவை என்ற நிலையில், இன்று ஒருநாள் ஆட்டம் மீதமுள்ளது. பேட்டிங்கிற்கு சாதகமாக ஆடுகளம் இல்லாத நிலையில், இந்த இலக்கை தென் ஆப்பிரிக்கா எட்டுவது மிகவும் கடினம் என கூறப்படுகிறது. இதனால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிகிறது.