டைமண்ட் லீக் தொடரின் சாம்பியனான முதல் இந்தியர்...! அசத்திய நீரஜ் சோப்ரா..!

டைமண்ட் லீக் தொடரின் சாம்பியனான முதல் இந்தியர்...! அசத்திய நீரஜ் சோப்ரா..!

சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில், நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். 

கடந்த ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, தற்போது டைமண்ட் லீக் சாம்பியனாகவும் உள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டின் சுரிட்ச் நகரில், டைமண்ட் லீக் தடகள போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய அணியின் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.