ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி.. அரையிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து!!

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி..  அரையிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து!!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா நகரில், ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், இந்தியா வின் நட்சத்திர வீராங்கனை பி. வி.சிந்து, சீனாவை  சேர்ந்த ஹி பிங் ஜியாவோவை எதிர்கொண்டார்.

விறு விறுப்பான ஆட்டத்தில் முதல் செட்டை 21-9 என எளிதில் கைப்பற்றிய பி. வி.சிந்து, இரண்டாவது செட்டை 13-21 என இழந்து ஏமாற்றம் அளித்தார். 1-1 என சமநிலையில் இருந்த போது, பரபரப்பான 3 வது செட்டில் சிறப்பாக விளையாடிய பி வி சிந்து, 21-19 என 3வது செட்டைக் கைப்பற்றி, ஹி பிங் ஜியாவோவை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் ஜப்பானின் அகானே யமாகுச்சியை எதிர்த்து விளையாடவுள்ளார் சிந்து.