இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் விளையாடும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஜோகனஸ்பர்க்கில் தொடங்கவுள்ள நிலையில், தொடரை கைப்பற்றி சாதனை படைக்க இந்திய அணி முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : தொடரை கைப்பற்றுமா இந்தியா?

தென்ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து 1க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பர்க்கில் இன்று தொடங்குகிறது.

‘தென்ஆப்பிரிக்காவின் கோட்டை’ என்று வர்ணிக்கப்பட்ட செஞ்சூரியனில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவை வெற்றி கண்டு வரலாற்றை மாற்றி காட்டியது. இதே உற்சாகத்துடன் ஜோகனஸ்பர்க்கில் களம் இறங்கும் இந்திய அணி வீரர்கள் தொடரை கைப்பற்றும் பட்சத்தில் வரலாற்று சாதனை படைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் பேட் செய்யும் அணிக்கு வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் என்பதால் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.