நாடு முழுவதும் ஒரே நாளில் 35,499 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு...

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 35,499 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 35,499 பேர்  கொரோனா தொற்றால் பாதிப்பு...
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 39,686 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தமாக இதுவரை 3,11,39,457 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதும் தற்போது 4,02,188 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பானது 3,19,69,954 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது.
 
கடந்த 24 மணி நேரத்தில்  447 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 4,28,309 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 16,11,590 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 50,86,64,759 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.