நாட்டில் உள்ள குடும்பங்கள் அனைத்தும் தங்கள் குடும்பத்தில் ஒரு திருமணத்தையாவது உத்தரகண்ட் மாநிலத்தில் நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் அம்மாநில அரசு நடத்தும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து முதலீட்டாளர்கள் அமைத்திருந்த கண்காட்சியை பார்வையிட்டார்.
இதையும் படிக்க : ”ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை" - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்
இதனைத் தொடர்ந்து மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவில் தயாரிப்போம் இயக்கத்தைப் போல் இந்தியாவில் திருமணம் செய்வோம் என்ற இயக்கத்தை தொடங்க வேண்டும் என்று கூறினார். உத்தரகண்ட் மாநிலத்தை திருமணத் தலமாக மாற்ற அனைத்து குடும்பங்களிலும் ஒரு திருமணத்தையாவது உத்தரகண்ட் மாநிலத்தில் நடத்த முன்வர வேண்டும் என்று கூறினார்.
இலக்கு நோக்கி பயணிக்கும் இன்றைய இந்தியா, அரசியல் நிலையற்ற தன்மையை விரும்பவில்லை என்று மோடி தெரிவித்தார். வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் என்ற மந்திரத்துடன் இந்தியா அடைந்து வரும் வளர்ச்சிக்கு உத்தரகண்ட் மாநிலம் ஒரு ஒளிமயமான எடுத்துக்காட்டு என்று பெருமிதம் தெரிவித்தார்.
சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற மத்திய அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததை அடுத்து, மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் காங்கிரசும், மிசோரம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கமும் ஆட்சியை கைப்பற்றின.
இந்த தேர்தலில், மத்திய அமைச்சர்களாக இருந்த சிலரும், எம்.பி.க்கள் சிலரும் போட்டியிட்டனர். இவர்களில் மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், பிரகலாத்சிங் பட்டேல், ரேணுகா சிங் உட்பட 12 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
இதனையடுத்து, தங்களது பதவிகளை மூவரும் ராஜினாமா செய்தனர். இதேபோல், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராகேஷ் சிங், உத்ய பிரதாப் சிங் மற்றும் ரித்தி பதக், ராஜஸ்தானை சேர்ந்த கிரோடி லால் மீனா, தியா குமாரி மற்றும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், சத்தீஸ்கரை சேர்ந்த கோமதி சாய், அருண் சாவ் ஆகியோரும் தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் படேல் மற்றும் ரேணுகா சிங் ஆகியோரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உடனடியாக ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சராகவும், ஷோபா கரந்த்லாஜே உணவு பதப்படுத்துதல் தொழில்துறையின் இணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் இணை அமைச்சராக ராஜீவ் சந்திரசேகரையும், பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராக பார்தி பிரவின் பவாரையும் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
தெலங்கானாவின் புதிய முதலமைச்சராக காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி பதவியேற்றார்.
தெலங்கானாவில் 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், 64 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அதனை தொடர்ந்து முதலமைச்சர் பதவிக்கு தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, பாட்டி விக்ரமார்கா, உத்தம் குமார் ரெட்டி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.
இதையடுத்து, ”ரேவந்த் ரெட்டியே முதலமைச்சராக பதவி ஏற்பார்“ என காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள எம்.பி. விளையாட்டரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ரேவந்த் ரெட்டி, தெலங்கானாவின் முதலமைச்சராக பதவி ஏற்று கொண்டார். அவருக்கு ஆளுநர் தமிழிசை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதையும் படிக்க : புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்...!
தொடர்ந்து பாட்டி விக்ரமார்கா துணை முதலமைச்சராகவும், சீதக்கா, தாமோதார் ராஜ நரசிம்மா, உத்தம் குமார் ரெட்டி உட்பட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். இதனிடையே ரேவந்த் ரெட்டிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து, பணிகளை சிறப்பாக மேற்கொள்ளுமாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நான்காம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது.
வரும் 4-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறும் குளிர்காலக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக,அனைத்துக்கட்சி கூட்டத்திற்காக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்த நிலையில், இன்று கூட்டம் நடைபெறுகிறது. குளிர்கால கூட்டத் தொடரை பொருத்தவரை நிலுவையில் உள்ள 37 மசோதாக்களை நிறைவேற்றவும், ஆறு மசோதாக்களை அறிமுகம் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. குறிப்பாக பொது சிவில் சட்டம் குறித்த விவாதம், மேற்குவங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா மீது உள்ள குற்றச்சாட்டு மற்றும் அவரை பணிக்கு சேர்ப்பது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி!
அதை வேளையில் எதிர்க்கட்சிகளின் சார்பாக மஹூவா மொய்த்ரா விவகாரம், ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சத்தா சஸ்பெண்ட் செய்யப்பட்டது, எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைத்து விசாரணை அமைப்புகளை பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் எனவும் தெரிகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 4-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர் கடந்த செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து, நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற டிசம்பர் 4-ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் 15 அமர்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் 18 மசோதாக்கள் உள்பட முக்கிய அலுவல்களை இந்தக் கூட்டத்தொடரில் மேற்கொள்ளவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
இதையும் படிக்க : "ED அதிகாரி கைது செய்யப்பட்டதை அரசியலாக்கக் கூடாது" - அண்ணாமலை
இந்நிலையில் இந்த கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்துக்கட்சிகளின் ஆதரவையும் அரசு நாடியுள்ளது. இது குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி இந்த கூட்டம் நாடாளுமன்றத்தின் நூலக கட்டிடத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக்கட்சிகளின் நாடாளுமன்றக்குழு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 22-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.