கோவாவில் முதல் பாதிப்பு.. 8 வயது சிறுவனுக்கு ஒமிக்ரான் உறுதி!!!

கோவாவில் முதல் நபராக, 8 வயது சிறுவனுக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவாவில் முதல் பாதிப்பு.. 8 வயது சிறுவனுக்கு ஒமிக்ரான் உறுதி!!!

கோவாவில் முதல் நபராக, 8 வயது சிறுவனுக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த சிறுவன் கடந்த டிசம்பர் 17ம் தேதி, இங்கிலாந்திலிருந்து கோவா வந்ததாக கூறப்படுகிறது. உருமாறிய ஒமிக்ரான் உலக நாடுகளுக்கு வேகமாக பரவி பரவி வருகிறது. இந்தியாவிலும் ஒமிக்ரான் அதிவேகமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன.

காலை நிலவரப்படி இந்தியாவில் 17 மாநிலங்களை சேர்ந்த 578 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் கோவாவில் 8 வயது சிறுவன் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்க்படப்டுள்ளார்.