உத்தரபிரதேச முதல்வர் வேட்பாளராக மீண்டும் யோகி ஆதித்யநாத் தேர்வு?

உத்தரபிரதேச முதல்வர் வேட்பாளராக மீண்டும் யோகி ஆதித்யநாத்தே போட்டியிடுவார் என பாஜக தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேச முதல்வர் வேட்பாளராக மீண்டும் யோகி ஆதித்யநாத் தேர்வு?

கொரோனா 2வது அலை பரவியபோது, உத்தரபிரதேசத்தில் பலர் உயிரிழந்ததோடு, அவர்களது உடல்கள் கங்கை ஆற்றில் மிதந்தன. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,  கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் யோகி சிறப்பாக செயல்படவில்லை என அவரது கட்சியை சேர்ந்த சில எம்எல்ஏக்கள், அமைச்சர்களே குற்றஞ்சாட்டினர்.

இதனால் விரைவில் நடைபெறவுள்ள தேர்தலில், அவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படமாட்டார் என தகவல் வெளியானது. இந்தநிலையில், சிறப்பாக செயல்படும் ஒருவரை முதல்வர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்க வேண்டும் என பாஜக பொது செயலாளரும், ராஜஸ்தான் பொறுப்பாளருமான அருண் சிங்  கூறி, குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.