அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை...

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை அடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை...
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோளில் 8.2 ஆக பதிவாகியிருப்பதாக அமெரிக்காவின் நில அதிர்வுக்கான மையம் தெரிவித்துள்ளது.  இதன் எதிரொலியாக அலாஸ்காவின் தீவு பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலாஸ்கா தீபகற்ப தீவு பகுதிகளில் இருந்து 70 மைல் தெற்கே இந்த கடுமையான நிலநடுக்கமானது உணரப்பட்டுள்ளது. 
 
இந்த கடுமையான நிலநடுக்கம் அலாஸ்காவின் பெரும்பாலான பகுதிகளில் பெரிய அளவில் உணரப்பட்டதாகவும், ஆனால் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அலாஸ்காவில் கடந்த ஆண்டு ஜுலை 22 ஆம் தேதி ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமே இதுவரையிலான அதிகபட்ச அளவாக இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது 8.2 அளவாக பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.