காக்கி உடையில் தக்காளி திருட்டு...வெளியான சிசிடிவி காட்சிகள்.....!!

கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபூர் அருகே காக்கி உடையில் வரும் இருவர் தக்காளியை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

காக்கி உடையில் தக்காளி திருட்டு...வெளியான சிசிடிவி காட்சிகள்.....!!

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. இதனால் தற்போது இருக்க கூடிய தக்காளியை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மிக பாதுகாப்புடன் கவனித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபூர், சிந்தாமனி தாலுக்காவில் காக்கி உடையில் வரும் இருவர் தக்காளியை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

சிந்தாமனி தாலுக்காவில் உள்ள வேளாண் விலை பொருள் மார்கெட்டில் விடியற்காலை விற்பனைக்காக தக்காளிகள் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டு அதன் மேல் தார்பாய் கொண்டு வியாபாரிகள் மூடி வைத்து உள்ளனர். அந்த தக்காளியை விடியற்காலை 3 மணி அளவில் வந்த இரண்டு நபர்கள் திருடி சென்றுள்ளனர். 

காக்கி உடை அணிந்து வந்த 2 நபர்கள் பெட்டிகளில் உள்ள தக்காளியை திருடி பைகளில் கொண்டு செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகளை தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.