14 மாவட்டங்களில் பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடை...அரியானா அரசு அதிரடி உத்தரவு
அரியானா மாநிலத்திலுள்ள 14 மாவட்டங்களில் பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசுபாடு காரணமாக டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஹரியானாவில் பட்டாசுகள் வெடிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தாலும், டெல்லிக்கு அருகிலுள்ள பிவானி, சர்கி தத்ரி, பரிதாபாத், குருகிராம், ஜஜ்ஜார், ஜிந்த், கர்னல், மகேந்திரகர்க், நுக், பல்வல், பானிபட், ரேவரி, ரோதக் மற்றும் சோனிபட் ஆகிய 14 மாவட்டங்களில் மட்டும் பட்டாசுகளை வெடிக்க, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், காற்றின் தரம் மேம்பட்ட பகுதிகளில் மட்டும் பசுமை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.