பாதி மொட்டை, பாதி மீசை....தேர்தல் தோல்வியால் வேட்பாளர் எடுத்த அவதாரம்...

ஆந்திரா உள்ளாட்சி தேர்தல் தோல்வியால் வேட்பாளர் ஒருவர், வாக்குறுதியளித்தப்படி பாதி மொட்டை,பாதி மீசை எடுத்துக்கொண்டார்.

பாதி மொட்டை, பாதி மீசை....தேர்தல் தோல்வியால் வேட்பாளர் எடுத்த அவதாரம்...

ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாநகராட்சிக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற்றது. 54 வார்டுகளை கொண்ட நெல்லூர் மாநகரில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஆளுங்கட்சியான YSR காங்கிரஸ் கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவியது

50-வது வார்டில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கப்பிரா சீனிவாசன் என்பவர் களம் கண்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெற்றால் பாதி மொட்டை, பாதி மீசை எடுத்துக்கொள்வதாக சவால் விட்டிருந்தார்.   

இந்நிலையில் தேர்தலில் தோல்வியடைந்த கப்பிரா சீனிவாசன், கொடுத்த வாக்குறுதிப்படி பாதி மொட்டை, பாதி மீசை எடுத்துக்கொண்டார். அதுமட்டுமல்லாமல்  அடுத்த சட்டமன்ற தேர்தல் வரையிலும் இப்படியே தொடருவேன் எனக்கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார்