இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் பெயர் டெல்டா: உலக சுகாதார நிறுவனம்

இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனாவுக்கு டெல்டா என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் பெயர் டெல்டா: உலக சுகாதார நிறுவனம்

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அமெரிக்கா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்கள் பாதிப்பைப் பல மடங்கு அதிகரித்துள்ளன.

இதற்கிடையே, வைரஸ்கள் அல்லது மாறுபாடு அடைந்த வைரஸ்களை, அவை கண்டறியப்பட்ட நாடுகளின் பெயர்களால் அடையாளம் காணப்படக் கூடாது என உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்ட கொரோனா வகைகளுக்கு உலக சுகாதார அமைப்பு பெயர்களை அறிவித்துள்ளது. 

அதன்படி, கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் கண்டறியப்பட்ட B. 1.6 17 வகை கொரோனா வைரசுக்கு டெல்டா என பெயரிட்டுள்ளது. இதேபோல், இங்கிலாந்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் கண்டறியப்பட்ட கொரோனா ஆல்ஃபா எனவும், தென் ஆப்பிரிக்காவில் கடந்தாண்டு மே மாதம் கண்டறியப்பட்ட கொரோனா பீட்டா எனவும், பிரேசிலில் கடந்த ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட வகை காமா எனவும், அமெரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவுக்கு எஃப்சிலான் எனவும் உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.