உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும்..பிரதமர் மோடிக்கு வருண் காந்தி கடிதம்

போராட்ட களத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடுவழங்க வேண்டும் என பாஜக எம்.பி வருண் காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும்..பிரதமர் மோடிக்கு வருண் காந்தி கடிதம்

மக்களவை உறுப்பினர் வருங்காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஓராண்டாக 3 வேளான் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்த பெருந்தன்மைக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

மேலும், அமைதியான முறையில் போராட்டம் நடத்தியும், இதுவரை 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் இன்னுயிரை மாய்த்து உள்ளனர்; ஒருவேளை பிரதமர் தன் முடிவை முன்னரே எடுத்து இருந்தால்  அவர்கள் யாரும் பலியாகி இருக்க மாட்டார்கள் எனவும் உயிரிழந்த விவசாய்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அக்கடிதத்தில் கேட்டு கொண்டுள்ளார்.

மேலும், அரசியல் உள்நோக்கத்துடன் விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட பொய்யான FIR பதிவுகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.