தலிபான்களுக்கு பெண்களிடம் எப்படிப் பழகுவது எப்படிப் பேசுவது என்றே தெரியாது…  

தலிபான்களுக்கு பெண்களிடம் எப்படிப் பழகுவது எப்படிப் பேசுவது என்றே தெரியாது என தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாகித் தெரிவித்துள்ளார்.

தலிபான்களுக்கு பெண்களிடம் எப்படிப் பழகுவது எப்படிப் பேசுவது என்றே தெரியாது…   

ஆப்கனை தலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததை தொடர்ந்து, அவர்களுக்கு பயந்து அந்நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு வெளியேற முயற்சி செய்து வருகின்றனர். இதனால், ஆயிரக்கணக்கானோர் காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.

 எப்படியாவது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என முயற்சியில் ஈடுபட்டனர். விமானத்தின் சக்கரத்தில் தொங்கியபடி பயணித்த சிலர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 இந்த நிலையில் காபூலில் செய்தியாளர்களிடம் பேசிய தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாகித்,எங்கள் பாதுகாப்புப் படைகளுக்குப் பெண்களுடன் எப்படிப் பழகுவது, பெண்களிடம் எப்படிப் பேசுவது என்று பயிற்சி அளிக்கப்படவில்லை என்று கூறிய அவர், முழுப் பாதுகாப்பு அளிக்கப்படும் வரை பெண்களை வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.