உ.பியில் பணத்திற்காக கடத்தபட்ட பிரபல மருத்துவர்: 24 மணி நேரத்தில் மீட்ட தமிழக ஐபிஎஸ் அதிகாரிக்கு ரூ.4 லட்சம் சன்மானம்...

உத்திரபிரதேசத்தில் பணத்திற்காக கடத்தபட்ட பிரபல மருத்துவர் போலீசாரின் துரித முயற்சியால் 24 மணி நேரத்திற்குள்ளாக மீட்கப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி முனிராஜ் பெரும்பங்கு வகித்ததற்காக பாராட்டும் சன்மானமும் வழங்கப்பட்டுள்ளது.

உ.பியில் பணத்திற்காக கடத்தபட்ட பிரபல மருத்துவர்:  24 மணி நேரத்தில் மீட்ட தமிழக ஐபிஎஸ் அதிகாரிக்கு  ரூ.4 லட்சம் சன்மானம்...

உத்திர பிரதேசத்தில் பிரபல மருத்துவராக உமாகாந்த குப்தா காதல் வலையில் சிக்க  பணம் பறிக்கும் கும்பலால் கடத்தப்பட்டார். இதையடுத்து மருத்துவரை விடுவிக்க வேண்டும் என்றால் 5 கோடி ரூபாய் பணம் தர வேண்டும் என பணம்பறிக்கும் கும்பம் நிபந்தனை விதித்தது. இது குறித்து மருத்துவரின் குடும்பத்தார் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில்  மருத்துவரை மீட்கும் முயற்சியில் இறங்கினர். இதில் ராஜஸ்தான் போலீசாருடன்  உத்திர பிரதேச போலீசார் கைகோர்த்து மருத்துவரை மீட்கும் முயற்சியில் போராடினர்.

போலீசாரில் துரித முயற்சியால் மருத்துவர்  உமாகாந்த குப்தா 24 மணி நேரத்திற்குள்ளாக பத்திரமாக மீட்கப்பட்டார். இம்முயற்சியில் தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி முனிராஜ் பெரும்பங்கு வகித்ததற்காக அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன் 4 லட்சம் ரூபாய் சன்மானமும் வழங்கப்பட்டுள்ளது.