ராகுல்காந்தி இன்று லக்கிம்பூர் செல்ல திட்டம்... உ.பி. அரசு அனுமதி மறுப்பு...

லக்கிம்பூர் செல்ல ராகுல்காந்திக்கு உத்தரப் பிரதேச அரசு அனுமதி மறுத்துள்ளது.

ராகுல்காந்தி இன்று லக்கிம்பூர் செல்ல திட்டம்... உ.பி. அரசு அனுமதி மறுப்பு...

உத்தர பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் பலியாகினார். இந்த வன்முறை சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள் பலர் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் லக்கிம்பூர் கேரியில் வன்முறை மோதல்களின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களைச் நேரில் சந்திக்க, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று சீதாப்பூர் மற்றும் லக்கிம்பூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், லக்கிம்பூர் கேரியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அங்கு செல்ல ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழுவுக்கு அனுமதி இல்லை என உத்தரப்பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.