பவர் பேங்க் செயலி : பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்கலாம் - சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவிப்பு
பவர் பேங்க் செயலி மூலமாக பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்கலாம் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவித்துள்ளனர்.
பவர் பேங்க் செயலி மூலமாக பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்கலாம் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவித்துள்ளனர்.
பவர் பேங்க் செயலி மூலம் பணத்தை முதலீடு செய்தால் குறைந்த காலத்தில் பணத்தை இரட்டிப்பாக்கலாம் என்ற விளம்பரங்களை நம்பி, நூற்றுக் கணக்கானோர் பவர் பேங்க் செயலியில் தங்களது பணத்தை முதலீடு செய்து, மோசடி கும்பலின் வலையில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கானோர் பணத்தை இழந்துள்ளதாக புகார்கள் குவிந்து வந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்றும், இது குறித்த கூடுதல் தகவல்களை தெரிவிக்கலாம் எனவும், சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவித்துள்ளனர்.
மேலும், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியை அணுக ஏதுவாக தொலைபேசி எண்ணையும், மின்னஞ்சல் முகவரியையும், நேரில் சந்தித்து பேச ஏதுவாக முகவரியையும் வெளியிட்டுள்ளனர்.