வரும் 22 முதல் மீண்டும் திரையரங்குகளை திறக்க அனுமதி......மகாராஷ்டிர அரசு அறிவிப்பு

அக்டோபர் 22 ஆம் தேதி முதல் 50 சதவிகித பார்வையாளர்களுடன் திரையரங்குகளை மீண்டும் திறக்க மகாராஷ்ட்ரா அரசு அனுமதியளித்துள்ளது.

வரும் 22 முதல் மீண்டும் திரையரங்குகளை திறக்க அனுமதி......மகாராஷ்டிர அரசு அறிவிப்பு

இது தொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனா அறிகுறி இல்லாத நபர்கள் மட்டுமே திரையரங்கிற்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் திரையரங்கிற்கு வருவோர் கட்டாயம் முககவசம் அணிந்து வருவதுடன், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுள்ளது.