"பாஜகவுக்கு மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர்" - நாராயணசாமி

"பாஜகவுக்கு மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர்" - நாராயணசாமி

கர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் மரண அடி கொடுத்துள்ளதாகவும், வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக கர்நாடக மாநில தேர்தல் முடிவு அமைந்துள்ளதாக புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளதை அடுத்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர் கட்சியின் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக காமராஜர் சிலை அருகே வந்து பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் வெற்றியை கொண்டாடினர். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய  முன்னாள் முதல்வர் நாராயணசாமி, கர்நாடக தேர்தல் முடிவானது அடுத்த ஆண்டு நடைபெறக்கூடிய பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் என்றும்,  பாஜகவுக்கு மரண அடியை கர்நாடக மாநில மக்கள் கொடுத்துள்ளதாகவும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்த அராஜகத்திற்கு அம்மாநில மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும்  படிக்க      } திராவிட மாடல் ஆட்சி கர்நாடகாவில் எதிரொலி - அமைச்சர் பொன்முடி