தென் ஆப்பிரிக்கா பறந்தார் பிரதமர் மோடி...!

தென் ஆப்பிரிக்கா பறந்தார் பிரதமர் மோடி...!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று  தென்ஆப்பிரிக்கா சென்றார்.

பீஜிங், பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்குகிறது. 

இந்த மாநாடு, இந்த ஆண்டு நேரடி நிகழ்வாக நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு, தென்ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா அழைப்பு விடுத்து இருந்தார். அழைப்பை ஏற்ற பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை தென்ஆப்பிரிக்கா சென்றார்.

இதையும் படிக்க : சிங்கார சென்னையின் முக்கிய அடையாளங்களின் வரலாறு...!

இதில் சீன அதிபர் ஜின்பிங், பிரேசில் அதிபர் உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். மேலும் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் வங்காளதேசம், இந்தோனேஷியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கிறார்கள். 24-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக உறுப்பு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் பொது கரன்சி உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.