மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய வேண்டும்...முதலமைச்சர் ட்வீட்!

மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய வேண்டும்...முதலமைச்சர் ட்வீட்!

மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மேற்குவங்க மாநிலத்தில் விரைவில் நடைபெறவுள்ள பஞ்சாயத்துத் தேர்தல்களுக்கான பிரச்சாரப் பணியில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக க்ரிந்தியில் பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டரில் பாக்தோரோ புறப்பட்டு சென்றார் மம்தா.

பயணத்தின் இடையே திடீரென ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக, செவோக் விமானநிலையத்தில் மம்தா சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. இதில் மம்தா பானர்ஜிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதையும் படிக்க : மம்தா சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியது...!காரணம் என்ன?

இந்நிலையில் ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறங்கியதால் காயமடைந்துள்ள  மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சீக்கிரம் குணமடைய வேண்டும் என்றும், விரைவில் நலமுடன் திரும்பி வரவேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். 

முன்னதாக, மம்தா பானர்ஜி நலமுடன் உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜீப் பானர்ஜி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.