மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது....கர்நாடக முதலமைச்சர் அறிவிப்பு...

கர்நாடக அரசின் உயரிய விருதான ’கர்நாடக ரத்னா விருது ’மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது....கர்நாடக முதலமைச்சர் அறிவிப்பு...

கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். 46 வயதாகும் இவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்த போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலை பதிவு செய்தனர். 

அவரது நினைவிடம் அமைந்துள்ள காண்டிவரா மைதானத்துக்கு தொடர்ச்சியாக  ரசிகர்களும் திரைத்துறையினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று வரையும் பல ஆயிரம் ரசிகர்கள் அவரது நினைவிடத்தை சுற்றி வருகின்றனர். அதோடு, அவரது கண்கள் தானம் செய்யப்பட்டதால் கடந்த 15 நாட்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கர்நாடகாவில் கண்தானம் செய்துள்ளனர்.

இந்தநிலையில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.