மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு....

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக இன்று நடை திறக்கப்பட்டது.

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு....

சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிசம்பர் 26-ம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14-ம் தேதி மகரவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, சுவாமிக்கு தீபாரதனை நடைபெற்றது.

கொரோனா விதிகளின்படி ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை பக்தர்கள் கட்டாயம் கொண்டு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்திருந்த நிலையில் கேரள மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் அடுத்த மூன்று நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.