புதுச்சேரியில் நாளை,நாளை மறுநாள் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர்மழை காரணமாக புதுச்சேரியில் நாளை மற்றும் நாளை மறுதினம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

புதுச்சேரியில் நாளை,நாளை மறுநாள் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் தொடர் மழை காரணமாக இரண்டு நாட்களுக்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் 1 முதல் 8-ம் வகுப்புக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கபட இருந்த நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்..