தலைநகர் டெல்லியில் வெளுத்து வாங்கும் கனமழை...மணிக்கணக்கில் வரிசையில் நிற்கும் வாகனங்கள்!

தலைநகர் டெல்லியில் வெளுத்து வாங்கும் கனமழை...மணிக்கணக்கில் வரிசையில் நிற்கும் வாகனங்கள்!

டெல்லியில் பெய்து வரும் கனமழையால் ஊரே வெள்ளக்காடான நிலையில், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலும் இரவில் மழையும் நிலவி வந்த நிலையில், இன்று நாள் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கியது. மின்டோ பிரிட்ஜ், மஜ்னு திலா, லுட்யன்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதையும் படிக்க : ”ராஜ்பவன் ஆர். என்.ரவியே ! எங்கள் அமைச்சரை நீக்க நீ யார்?” போஸ்டரால் பரபரப்பு!

நஜாஃப்கர், பாரத் தர்ஷன் பார்க் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளான நிலையில், நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் போக்குவரத்து நெரிசல் நீடித்தது. 

நகர் முழுவதும் உள்ள சுரங்கப் பாதைகளில் வாகனங்களை நிறுத்தி போலீசார் கண்காணித்து வரும் நிலையில், தொடர்ந்து பாதுகாப்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.