பட்ட பகலில் கார் கண்ணாடியை உடைத்து பணம் திருட்டு- மர்மநபருக்கு வலைவீச்சு
ஓசூரில் பட்டபகலில் கார் கண்ணாடியை உடைத்து 19 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை திருடி சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு விஜயநகரா பகுதியை சேர்ந்தவர் ஹேமந்த்குமார். இவர் இன்று குடும்பத்தினருடன் ஒசூர் அடுத்த கெலமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து தனது நிலத்தை விற்றுள்ளார். நிலம் விற்ற பணத்தை அவர்கள் வந்த காரில் வைத்துக்கொண்டு மதிய உணவு உட்கொள்ள குடும்பத்தினருடன் சென்றதாக கூறப்படுகிறது.
உணவறிந்து விட்டு மீண்டும் காரின் அருகே வந்தவர், காரின் வலதுபக்க கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 19 லட்சத்து 30 ஆயிரம் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின்னர் அவர் கொடுத்த தகவலின்பேரில் அங்கு வந்த போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.