ஐ லவ் பாகிஸ்தான் வாசகத்துடன் வயல்வெளியில் கிடந்த பலூன்கள்

பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் கொடி மற்றும் ஐ லவ் பாகிஸ்தான் என்ற வாசகத்துடன் கிடந்த பலூன்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐ லவ் பாகிஸ்தான் வாசகத்துடன் வயல்வெளியில் கிடந்த பலூன்கள்

 இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா, இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பாகிஸ்தானில் நேற்று சுதந்திர தின விழா கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை மாநிலமான பஞ்சாபில் உள்ள வயல்வெளிகளில் ஏராளமான பலூன்கள் கிடந்தன.

அந்த பலூன்களில் பாகிஸ்தான் கொடி அச்சிடப்பட்டு, ஐ லவ் பாகிஸ்தான் என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து கூறிய போலீசார், அருகில் உள்ள இடத்தில் இருந்து இந்த பலூன்கள் வந்திருக்கலாம் என்றும், ஆனால், மற்ற கோணங்களிலான விஷயங்களையும் புறந்தள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.