குடிபோதையில் அட்டூழியம்... சாலையில் செல்வோரை வழிமறித்து தாக்கும் மூன்று இளைஞர்கள்

புதுச்சேரியில் மது போதை தலைக்கேறிய மூன்று இளைஞர்கள் சாலையில் செல்வோரை வழிமறித்து தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குடிபோதையில் அட்டூழியம்... சாலையில் செல்வோரை வழிமறித்து தாக்கும் மூன்று இளைஞர்கள்

புதுச்சேரி கிராம பகுதியான ஆலங்குப்பத்தை சேர்ந்தவர் தமிழரசன், எலக்ட்ரிசனான இவர் தனது வேலையை முடித்து விட்டு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட வந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் போதையில் சுற்றி திரிந்த மூன்று இளைஞர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கினர். இச்சம்பவம் அங்கு பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியது.

போதை இளைஞர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த தமிழரசனை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து தன்வந்திரி காவல்நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் மூன்று இளைஞர்களும் சஞ்சிவி நகரைச் சேர்ந்த விக்கி, சரண் மற்றும் ஜோதி என தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.