இந்து முறைப்படி ஜெர்மனி காதலனை கரம் பிடித்த ரஷ்ய இளம்பெண்!!

ஜெர்மனியை சேர்ந்த காதலை ரஷிய இளம்பெண் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது

இந்து முறைப்படி ஜெர்மனி காதலனை கரம் பிடித்த ரஷ்ய இளம்பெண்!!

ரஷ்யாவை சேர்ந்த ஜூலியா உக்வெஸ்கினா என்பவர் வியட்நாம் நாட்டில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.இதற்கிடையே ஜெர்மனியை சேர்ந்த கிறிஸ் முல்லர் இவர் பன்னாட்டு நிறுவனத்தில் செயல் அதிகாரியாக செயல்பட்டுவருகிறார்.ஒரு பயணத்திற்காக அவர் வியட்நாம் சென்ற போது ஜூலியா உக்வெஸ்கினாவை சந்தித்துள்ளார்.இதனை தொடர்ந்து இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

காதலர்களாக இருவரும் வெவ்வேறு நாடுகளுக்கு சுற்று பயணத்தினை மேற்கொண்டுள்ளனர்.அவர்கள் அந்தந்த நாட்டில் பின்பற்றப்பட்டு வந்த கலாச்சாரங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டு வந்துள்ளனர்.இதுவரை ஜூலியா இந்தியாவிற்கு 8 முறை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காதல் ஜோடிகளான கிறிஸ் ஜூலியா இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்த நிலையில் இந்து முறைப்படி திருமணத்தை நடத்த வேண்டும் என ஜூலியா தனது விருப்பத்தை தெரிவித்தார்.தனது காதலியின் விருப்பத்தை அப்படியே கிறிஸ் ஏற்று நடத்தியுள்ளார்.

அதன்படி, இந்தியாவின் குஜராத் மாநிலம் சபர்காத் மாவட்டத்தில் உள்ள தனது நண்பர்களை தொடர்பு கொண்ட கிறிஸ் தனது திருமணம் இந்து மத முறைப்படி நடைபெற வேண்டும் கூறினார். இதனையடுத்து, கிறிஸ் - ஜூலியா திருமணத்தை சபர்காத் மாவட்டத்தில் நடத்த தேவையான நடவடிக்கைகளை நண்பர்கள் எடுத்துள்ளனர்.

இதையடுத்து கடந்த வியாழக்கிழமை குஜராத்தின் சபர்காத் மாவட்டம் ஹிமத்நகர் கிராமத்தில் தனது காதலியான ரஷியாவை சேர்ந்த ஜூலியா உக்வெஸ்கினாவை ஜெர்மனியை சேர்ந்த கிறிஸ் முல்லர் இந்து மத முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இருவரின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.