காங்கிரஸ் தலைவர் போட்டியிலிருந்து விலகலா? சசி தரூர் விளக்கம்!

காங்கிரஸ் தலைவர் போட்டியிலிருந்து விலகலா? சசி தரூர் விளக்கம்!

காங்கிரஸ் தலைவர் தேர்தல் களத்தில் இருந்து தான் விலகவில்லை என கேரள எம்.பி சசிதரூர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை திரும்ப பெற இன்று கடைசி நாள் என கூறப்பட்டது.

இந்நிலையில்சசிதரூர் போட்டியிலிருந்து விலகியதாக தகவல் கசிந்து வருகிறது. இந்தநிலையில் இது வதந்தி என கூறி  வீடியோ வெளியிட்டுள்ள சசிதரூர், தலைவர் தேர்தலில் இருந்து தான் விலகவில்லை என்றும், விலகவும் மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.  தனது வாழ்நாளில் போட்டிகளில் இருந்து எப்போதும் விலகிக்கொண்டதும் இல்லை எனவும் கூறியுள்ளார்.