புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்திற்கு வெள்ள எச்சரிக்கை!

புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்திற்கு வெள்ள எச்சரிக்கை!

கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக புதுச்சேரி மாநிலத்தின் ஏனாம் பிரந்திய மக்களுக்கு 1 ஆம் எண் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலத்தின் கோதாவரி ஆற்றங்கரையோரம் உள்ளது. இதனிடையே கோதாவரி ஆற்றில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுத்து வருவதால் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள வீடுகளில் நீர் உட்புகுந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

இந்நிலையில் கோதாவரி ஆற்றில் மீண்டும் நீர் வரத்து அதிகரித்து வருவதால்  ஏனாம் பிராந்திய மக்கள் எச்சரிக்கையாக இருக்க நிர்வாக அதிகாரி அம்மன் ஷர்மா முதல் எச்சரிக்கை விடுத்துள்ளார் மேலும்  படகு குழாம் சாலை, கோ.வி.ஆர் நகர், ஹெலிபேட் பகுதி, குரு கிருஷ்ணா புரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் அப்பகுதியில் வாசிக்கும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.