மற்ற நாடுகளை விட எரிபொருள் விலை உயர்வு கட்டுப்படுத்தப் பட்டுள்ளது- பெட்ரோலிய அமைச்சர்!

மற்ற நாடுகளை விட எரிபொருள் விலை உயர்வு கட்டுப்படுத்தப் பட்டுள்ளது- பெட்ரோலிய அமைச்சர்!

எரிசக்தி வாரம் 2023 நிகழ்ச்சியையொட்டி அதன் இலச்சினையை வெளியிட்ட பிறகு ஒன்றிய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியுள்ளதாவது, உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்ள இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தற்சார்பு நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. 

பிரதமரின் தொலைநோக்கு தலைமையின் கீழ், தற்சார்பு நடவடிக்கைத் தொடர்பான முதலீட்டை ஊக்குவிக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பெட்ரோலில் எத்தனாலை 10 சதவீதம் கலப்பது, 2ஜி சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மத்திய அரசின் உறுதிப்பாட்டின் அடையாளமாகும். 

வளர்ந்த நாடுகளில் எரிபொருள் விலை உயர்வு மிக அதிகமாக இருக்கிறது. அதை ஒப்பிடுகையில் இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு கட்டுப்படுத்தப் பட்டுள்ளது.