அனுமதியில்லாமல் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுகிறதா கர்நாடகம்.? -தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழக்கு.! 

அனுமதியில்லாமல் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுகிறதா கர்நாடகம்.? -தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழக்கு.! 

கர்நாடகா மாநிலம் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரி அடங்கிய குழுவை அமைத்துள்ளது தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.

பெங்களூருவின் குடிநீர் தேவை மற்றும் மின் உற்பத்திக்காக 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கட்டுமான பொருட்களை குவிப்பதாக வந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து  வழக்கு பதிவு செய்தது தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம். இந்த செய்தி உண்மையா என்பது பற்றி அறிய மத்திய அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரி அடங்கிய குழுவை அமைத்துள்ளது

மேலும் வன பாதுகாப்பு சட்டம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பின்படி எந்த அனுமதியும் பெறாமல் அணை கட்டுவதால் 5,252 ஹெக்டேர் வனப்பகுதி தண்ணீருக்குள் மூழ்கவும், வன விலங்குகள் சரணாலயத்திற்கு பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது.  
 
அதோடு இந்த வழக்குக்கு மத்திய அரசும், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஜூலை 5 தள்ளிவைத்தது.