மத்தியஸ்தம் செய்வது காங்கிரஸ் வேலையல்ல... கர்நாடக காங்கிரஸ் தலைவர் பேட்டி...

மேகதாது திட்டத்தை எடியூரப்பா செயல்படுத்த வேண்டும் என கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

மத்தியஸ்தம் செய்வது காங்கிரஸ் வேலையல்ல... கர்நாடக காங்கிரஸ் தலைவர் பேட்டி...
கர்நாடகாவின் மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு முனைப்பு காட்டுவதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் உள்ளன. இந்த நிலையில், நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், மண்டியா கே.ஆர்.எஸ். அணையில் விரிசல் ஏற்பட்டதாக சுமலதா எம்.பி. கூறியுள்ளது குறித்து, குமாரசாமி கருத்து தெரிவித்தது, அவர்கள் 2 பேருக்கும் இடையேயான பிரச்சினை என்றும், அவர்களுக்கு இடையிலான மோதலில் காங்கிரஸ் ஒருபோதும் தலையிடாது என்றும் கூறினார்.
அவ்வாறு அணையில் விரிசல் ஏற்பட்டு இருந்தால், அதுகுறித்து முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் எனக் கூறிய அவர், சுமலதா - குமாரசாமி பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது காங்கிரஸ் வேலை அல்ல என்றார். மேலும், மேகதாது திட்டத்தை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா செயல்படுத்த வேண்டும் என்றும், அரசு சரியாக செயல்படாத போது காங்கிரஸ் அறிவுரை கூறும் என்றும் கூறினார்.