மணமேடையை விட்டு கீழே இறங்கி ஓடிய மணமகள்! மணக்கோலத்தில் அசிங்கப்பட்ட மணமகன்..! என்ன காரணம்?

மணமகன் மாலை போடும் போது, மணமேடையில் இருந்து கீழே இறங்கிய மணமகளின் செயல் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மணமேடையை விட்டு கீழே இறங்கி ஓடிய மணமகள்! மணக்கோலத்தில் அசிங்கப்பட்ட மணமகன்..! என்ன காரணம்?

கேரள மாநிலம் கொல்லம் அருகே மண்துருத்தி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் , கல்லுநாகம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் குடும்பத்தினரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நிச்சயித்தப்படி திருமண ஏற்பாடுகளும்  உறவினர்கள், நண்பர்கள் என பெரும்பாலானோர் மண்டபத்தில் சூழ்ந்திருக்க தடபுடலாக நடந்து வந்தது.

அதன்படி மணமகனும், மணமகளும் மேடைக்கு வரவழைக்கப்பட்டு, இருவரையும் ஒன்றாக நிற்க செய்தனர். பின் மாப்பிள்ளை பொண்ணையும் மாறி மாறி மாலையை அணிவிக்குமாறு கூறினர். அதனால் மாப்பிள்ளையும் மாலையை எடுத்து மணமகளுக்கு அணிவிக்க போனார். அப்போது, மாப்பிள்ளையை மணப்பெண் தடுத்து நிறுத்திவிட்டு, திடீரென மணமேடையில் இருந்து கீழே இறங்கி ஓடிவிட்டார். உறவினர்கள் அவரை தடுத்து நிறுத்த எவ்வளவு முயன்றும் , கேட்காத மணப்பெண் ரூமுக்குள் சென்று பூட்டிக்கொண்டார். இவரின் செயலால் மண்டபமே திகைப்பில் உறைந்தது.

இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெண்ணை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், மணமகளின் காதல் விவகாரம் வெளியே தெரியவந்தது. ஏற்கனவே இன்னொரு நபரை காதலிப்பதாகவும், பெற்றோரின் கட்டாயத்தில் தான் இந்த திருமணத்துக்கு சம்மதித்ததாகவும் அந்த பெண் போலீசாரிடம் கூறினார்.  பிறகு, போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேசிய போதும், மணப்பெண் பிடிவாதமாக திருமணம் வேண்டாம் என்று உறுதியாக சொல்லிவிட்டார்.

இறுதியாக, வேறுவழியின்றி பெண்வீட்டார் மணமகன் வீட்டாருக்கு நஷ்டஈடு கொடுக்க ஒப்புக் கொண்டதையடுத்து, மண்டபத்தில் இருந்து அனைவரும் வெளியேறினர். அதன்பிறகு போலீசார் கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்றால், முதலிலேயே சொல்லி இருக்க வேண்டும், சம்பந்தமில்லாத இளைஞரை மணமேடை வரை அழைத்து வந்து இப்படியெல்லாம் அசிங்கப்படுத்த கூடாது என்று மணப்பெண்ணுக்கு அட்வைஸ் தந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.