அம்பானிக்கு முன்னரே ரத்தன் டாடா பணக்காரரா.... பட்டியலில் முந்த முடியாததற்கு காரணம் என்ன

அம்பானிக்கு முன்னரே ரத்தன் டாடா பணக்காரரா.... பட்டியலில் முந்த முடியாததற்கு காரணம் என்ன

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி முதல் இடத்தில் உள்ளார் என்பது நாம் அறிந்த ஒன்று .. ஆனால் இவர் பணக்காரர் ஆவதற்கு முன்னரே ரத்தன் டாடா இந்தியாவின் பணக்காரராக இருந்துள்ளார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

ஆனாலும் இன்று வரை ரத்தன் டாடாவால் அம்பானியை பணக்காரர்கள் பட்டியலில் முந்த முடியவில்லை.

இதற்கு காரணம் என்ன? அதாவது அம்பானி எப்போதும் பணம் ஒன்றையே குறிக்கோளாக வைத்து தொழில் செய்பவர் என்றும், அவருடைய நோக்கம் எப்போதும் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்பது மட்டும் தான் எனவும் கூறப்படுகிறது. தன் தொழிலில் எந்த நிலைக்கு சென்றாலும் மேல் நோக்கி சென்று கொண்டே இருக்கவேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் இருக்கும். அதனால் தான் அவர் எப்போதும் முதல் இடத்திலேயே இருக்கிறார்.

இதேவேளை ரத்தன் டாடா தன்னை சுற்றி உள்ள மக்களும், தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளிகளும் நன்றாக இருக்க வேண்டும் என அவர் நினைப்பவர். நாட்டில் ஏதேனும் ஒரு துயர சம்பவம் நிகழும்போது முதன் முதலாக நிவாரண நிதி வழங்கும் நபர் இவராகத்தான் இருப்பார்.

அத்துடன் தற்போது கூட தன் டாடா குழுமத்தில் வேலை செய்யும் நபர்கள் கொரோனா தொற்றால் 
உயிரிழந்தால் அவருடைய பதவிக்காலம் முடியும் வரை அவருடைய குடும்பத்துக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படும் என்பதை அறிவித்துள்ளார்.