உத்தரபிரதேசம்: சஹாரன்பூர்-டெல்லி பயணிகள் ரயிலில் திடீர் தீ விபத்து!!

சஹாரன்பூர்-டெல்லி பயணிகள் ரயில் இன்ஜின் மற்றும் 2 பெட்டிகளில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம்: சஹாரன்பூர்-டெல்லி பயணிகள் ரயிலில் திடீர் தீ விபத்து!!

உத்தரபிரதேசம்: 

மீரட் அருகே உள்ள தௌராலா ரயில் நிலையத்தில் சஹாரன்பூரில் இருந்து டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலின் இன்ஜின் மற்றும் 2 பெட்டிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, மற்ற பெட்டியில் இருந்து பயணிகள் வெளியே வரத் தொடங்கினர். எனினும், தீ மளமளவென முழுவதுமாக பெட்டிக்குள் பரவியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதையடுத்து, தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். மேலும் இந்த தீ விபத்து காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.