சனிக்கிழமை முதல் மாஸ்க் தேவையில்லையாம்...! எந்த மாநிலத்தில் தெரியுமா..?

மகராஷ்டிராவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால், சனிக்கிழமை முதல் முககவசம் அணிய தேவையில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

சனிக்கிழமை முதல் மாஸ்க் தேவையில்லையாம்...! எந்த மாநிலத்தில் தெரியுமா..?

கொரோனா அலைகளால்  மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த மகராஷ்டிரா மாநிலம், ஒமிக்ரான் பரவலின் போது,  கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியது. மேலும் பொது இடங்களில் மக்கள் கூட தடை விதித்து, முககவசம் அணிவதை கட்டாயமாக்கியது.

இந்தநிலையில் தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளதால்,கொரோனா கட்டுப் பாடுகள் நாளை மறுநாள் முதல் முழுவதும் விலக்கி கொள்ளப்படுவதாகவும், முககவசமும் அணியத்தேவையில்லை எனவும்  மகராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.