சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் ஆர்யன் கானுக்கு எந்தவித தொடர்பும் இல்லையாம்!!

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் ஆர்யன் கானுக்கு தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை - சிறப்பு புலனாய்வு குழு

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் ஆர்யன் கானுக்கு எந்தவித தொடர்பும் இல்லையாம்!!

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் ஆர்யன் கானுக்கு தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் நடைபெற்ற போதை விருந்தில் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான் கலந்து கொண்டதாகவும், அவரிடம் இருந்து போதை வஸ்துக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.

ஒரு மாத காலம் சிறையில் இருந்த ஆர்யன் கான் பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இன்னும் சில மாதங்களில் இறுதி விசாரணைக்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், ஆர்யானுக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இல்லை என கூறப்பட்டுள்ளது