வரலாற்றில் இடம்பெற்ற 40 தியாகிகளின் பெயர்கள்...!

வரலாற்றில்  இடம்பெற்ற 40 தியாகிகளின் பெயர்கள்...!

புல்வாமா தாக்குதலில்  உயிரிழந்த 40 தியாகிகளின் பெயர்கள், வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

ஹரியானா மாநிலம் கர்னாலில் உள்ள ஹரியானா போலீஸ் அகாடமியில், புதிய காவல் தொழில்நுட்பத் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இதையடுத்து அமைச்சர் பேசிய போது, இத்திட்டத்தால் கான்ஸ்டபுள் முதல் டிஜிபி வரை அனைவருக்கும் தொழில்நுட்பக் கல்வி தொடர்பான அறிமுகம் வழங்கப்படும் என தெரிவித்தார். 

இதையும் படிக்க : பலருக்கும் காதல் எட்டாக்கனி தான்...காதலால் மருத்துவ படிப்பை இழந்த இளம்பெண்!

தொடர்ந்து பேசிய அவர், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 சிஆர்பிஎஃப் வீரர்களின் பெயர்கள், வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.