ஹெலிகாப்டர் விபத்தில் பலியான வீரர்களில் 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன...

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான வீரர்களில் 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான வீரர்களில் 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன...

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் பிரிகேடியர் லிடர் ஆகிய மூன்று பேரில் உடல்கள் அடையாளம் காணப்பட்டு நேற்று இறுதி சடங்குகள் முழு ராணுவ மரியாதையுடன் நடைபெற்றது.

மற்றவர்களின் உடல்கள் தீயில்கருகி அடையாளம் காணமுடியாதபடி இருந்ததால், உடனடியாக அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. உடல்கள் சிதைந்துகாணப்பட்டதால் அங்க அடையாளங்களின்படி, சடலங்களை கண்டறிவதிலும் சிக்கல் ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து, உயிர் இழந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டறிய  டி.என். ஏபரிசோதனை நடத்a. இந்தநிலையில் தற்போது வரை 6 பேரில் உடல்கள் அடையாள காணப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாண்டோ வீரர்கள் பி.சாய் தேஜா, விவேக் குமார்,பிரதீப், சௌஹான், ராணா பிரதாப் தாஸ் மற்றும் குல்தீப் சிங் ஆகிய 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. எஞ்சியவர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.