8 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு

மகராஷ்டிரா மாநிலம், மும்பையில் இன்று முதல் மீண்டும் 8 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

8 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு

மகராஷ்டிரா மாநிலம், மும்பையில் இன்று முதல் மீண்டும் 8 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமெடுத்ததும்,மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக அவர்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.  தற்போது தொற்று குறைந்துள்ள நிலையில், அவர்களது மன நலன் கருதி பள்ளிகளை படிப்படியாக திறக்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைத்து வருகின்றனர்.

இந்தநிலையில் மும்பையில் முதற்கட்டமாக 8 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் திறக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதுடன், பள்ளிகளில் கொரோனா விதிகள் பின்பற்றப்பட்டதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.